<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=10703033&amp;blogName=%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=BLACK&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http%3A%2F%2Fanjsunassaththiram.blogspot.com%2Fsearch&amp;blogLocale=en_US&amp;homepageUrl=http%3A%2F%2Fanjsunassaththiram.blogspot.com%2F" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>
அஞ்சு நச்சத்திரம்

அவரவர் பதிவை அவரே தட்டினால் அஞ்சு நச்சத்திரப்பதிவாகுமாம் அது 

Friday, February 11, 2005

2/11/2005 04:10:00 PM - ஊக்கமளிச்சவைக்கு உபகாரம்

காசிலிங்கம் அண்ணையும் மதி அண்ணையும் சொன்னதுபோல அஞ்சு நச்சத்திரத்தில அஞ்சு நச்சத்திரத்தை ஏத்தியிருக்கிறன். நல்லது கெட்டதைப் பாத்துப் போடுங்கோ. எனக்குக் கருத்துச் சொல்லி ஊக்கமளிச்ச அவைக்கும் வசந்தன் அண்ணைக்கும் கயல்விழி அக்காவுக்கும் மெத்தப்பெரிய உபகாரம். அண்ணை அக்கா எண்டு வயதில கூட இருப்பீங்கள் எண்ட யோசனையோட சொல்லிப்போட்டன். எனக்கு வயசு இந்த வருசம் ஆடி ஏழாந்திகதி பிறக்க இருபத்தைஞ்சு. தற்செயலா என்னை விட வயசு குறைவாய் இருந்தால் கோபிக்கக்கூடாது. வலையில எழுதைக்குள்ள எழுதிறதை வச்சுத்தான் ஆளை மட்டுக்கட்டலாம். அதால உங்கட எழுத்தை வச்சு எனைவிட வயசுகூட இருப்பியள் எண்டு எண்ணுறன். பிழையாய் எண்ணிப்போட்டனெண்டால் திருத்திவிடுங்கோ. வலையில வயசுமட்டுமே, ஆளைப்பாக்காமல் பேரைமட்டும் பாத்து ஆம்பிளையா பொம்பிளையா எண்டுகூடச் சொல்ல ஏலாமக்கிடக்கிடக்கு எண்டு பாலன் அண்ணையும் மாறன் சித்தப்பாவும் எனக்கு என்ரை கலை எண்ட பெயரை வச்சுக் கிடைக்கிற நேரமெல்லாம் நக்கல் அடிக்கிறவை. கலையரசனோ கலையரசியோ கலைமகனோ கலைமகளோ எண்டு உன்ரை தனிக்கலையை வச்சுப் பிடிக்க ஏலாது எண்டமாதிரி நக்கல். அதுக்கு நானென்ன செய்ய ஏலும்? சினப்பிள்ளையிலயிருந்தே கலை கலை எண்டு வாய்க்குள்ள அவசரத்துக்கு வாறதுக்கெண்டும் செல்லமெண்டும் கூப்பிட்டுக் கூப்பிட்டு எனக்கே என்ரை முழுப்பேர் சில நேரத்தில ஆரும் கேட்டா சட்டெண்டு சொல்லவர்றேல்லை எண்டால் நீங்கள் நம்புவியளோ? சத்தியமா மாட்டியள்.

ரெண்டுநாளாப் பள்ளிக்கூடத்துக்குப் போகயில்லை. சரியான தலையிடியும் காச்சலும். போன் பண்ணிப் பிரின்சிப்பலிட்டைச் சொல்லப்பாத்தால் அவரில்லை. பின்னை சுகி அக்காட்டை பிரின்சிப்பலிட்டச் சொல்லச் சொல்லிப் போய்ச் சொல்லியிட்டு வந்தன். போன திங்கள் இரவு வாசிகசாலைக்கூட்டத்துக்குப்போயிட்டுப் பிறகு செந்திவீட்டை போய்க் கதைச்சுப்போட்டு வரேக்கையே கொஞ்ச தலையிடியாத்தான் இருந்துது. நான் அலைஞ்சு திரிஞ்சதால எண்டு விட்டிட்டன். அண்டைக்கு இரவு பாத்தாகொதி கொதி எண்டு கொதிக்குது. ரெண்டு அஸ்ப்ரினை நாலுமணத்தியாலத்துக்கு ஒருக்கா எடுத்துப்போட்டுப் போட்டுப் படுத்தால், எங்கை நித்திரை வருது? எல்லாம் பழைய ஞாபகந்தான் கனவில திரும்ப நடக்கிறதுமாதிரி மூச்சையும் நெஞ்சையும் அமுக்கின படி நடந்தது. அம்மா வந்து கொத்தமல்லி வைச்சுத்தரவோ எண்டால், எனக்குக் காச்சலே பறவாயில்லையெண்டு பட்டுது. கொத்தமல்லிக்கச்சலும் அதைக்குடிச்சு முடிக்க உள்ளங்கையில போட்டு நக்குற சீனியும். ரெண்டுமே அருவெறுப்பு. ஆனா கடைசியில காச்சலின்ரை கரைச்சலும் அம்மாவின்ரை கரைச்சலும் தாங்க ஏலாமச் சரி எண்டு சொல்லிச் சுடச்சுட மூக்கைப் பொத்திக்கொண்டு குடிச்சு முடிச்சன். கூடப்பயந்திருந்தனோ என்னவோ தெரியேல்ல. குடிக்கேக்க கச்சல் ஒண்டும் பெரிசில்லை எண்டு பட்டுது. வாறகிழமை அடுத்த கிழமையில, ரெண்டுநாளும் விட்ட வகுப்புகளை எடுக்கோணும். அது பெரிய தொந்தரவு. இண்டைக்கு மாறன் சித்தப்பாவோட செல்வபுரத்துக்குப் போகோணும். சம்பந்தப்பட்ட ஆக்களின்ரை நாட்டிண்டை ஊரின்ரை பேர்களைச் சொல்லுறது அவைக்குச் சரியில்லைத்தானே. அதால, இங்க மாத்தி எழுதியிருக்கிறன். மிச்சத்தைப் பிறகு வந்து எழுதுறன்.


Blogger Moorthi said...

என்னத்தைச் சொல்ல. இதுநாள் வரைக்குள் நல்லாவே எழுதி வந்திருக்கிறியள். இனிமேலும் நல்லா எழுதுவீங்க எண்ட நம்பிக்கை எனக்கு உள்ளது.

உங்களுக்கு எனது வாக்கு ஒன்றை அனுப்பிட்டேன்.  


Blogger -/பெயரிலி. said...

தொடர்ந்து எழுதுங்கள். துண்டுச்செய்திகளாக அல்லாது சம்பவக்கோவையாக எழுதுங்களேன்.  


Blogger செந்தழல் ரவி said...

ஒன்னும் புரியல...உங்க மெயில் கொடுங்க கேட்டுக்கறேன்  


Anonymous Anonymous said...

ஆங்  


Blogger tamiljunction said...

Hi

Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond. Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com  


Post a Comment

என்ரை இந்தப்பதிவைத் தமிழ்மணத்திலை தரப்படுத்துங்கோ. இப்பத்தைய தராதரம்:

மெத்தப்பெரிய உபகாரம்.


வலைப்போடு நச்சத்திரத்துழாவல்

© கலை 2005 - by Blogger Templates