<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=10703033&amp;blogName=%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=BLACK&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http%3A%2F%2Fanjsunassaththiram.blogspot.com%2Fsearch&amp;blogLocale=en_US&amp;homepageUrl=http%3A%2F%2Fanjsunassaththiram.blogspot.com%2F" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>
அஞ்சு நச்சத்திரம்

அவரவர் பதிவை அவரே தட்டினால் அஞ்சு நச்சத்திரப்பதிவாகுமாம் அது 

Tuesday, February 08, 2005

2/08/2005 09:33:00 PM - நானும் வலைப்பதியலாமெண்டு

இங்கை கடை திறக்கக் காரணம் ஆரெண்டு கேட்டால், பாலன் அண்ணையின்ரை பக்கமாத்தான் கையைக் காட்டுவன். திங்கக்கிழமை சும்மா செக்கைப் போடப் பாங்குக்குப் போனால், கையைப் பிடிச்சு இழுக்காத குறையாய்த் தள்ளிக்கொண்டு போய், வெப்லொக் காட்டுறாராம். உது தெரியுமெண்டன். "ஆளாளைப் பத்தி ஆயிரம் நொட்டை நொள்ளுச் சொல்லிக்கொண்டு திரியிறனி. எழுதன்" எண்டுறார். சொல்லுறனியள் நீங்கள் ஏன் எழுதக்கூடாதெண்டன். "நானே நாள் முழுக்க வாசிக்கிறதிலையும் பாக்கிறதிலையும் பிழை பிடிச்சுக்கொண்டு திரியிறன்?" எண்டு பதில் வருகுது. நேரமில்லை எண்டு சொல்லி ஒரு மாதிரி நழுவியிட்டன். கொடுப்புக்குள்ள அவர் சிரிச்சது எனக்குத் தெரியும். சும்மா சொல்லியிட்டு வந்தாலும், போக வர அவர் பத்த வச்ச பொறி காஞ்ச பொச்சில பட்டுப் பத்திப் பிடிச்சது மாதிரி பக்குப்பக்கெண்டு எரியத்துடங்கியிட்டுது எண்டுதான் சொல்லுவன். முடிவாய், நானும் வலைக்குள்ள தலையைக் குடுக்கலாமெண்டு குதிச்சாச்சு.

தலைப்பு என்ன வைக்கிறதெண்டு தலையைச் சொறிஞ்சால், சொடுகைத் தவிர வேறையண்டும் சொட்டினதாத் தெரியேல்ல. மிச்சப்பேர் எப்பிடி வைச்சிருக்கினமெண்டு பாக்கப்போனால், குப்பைகூளம் துடங்கி கோட்டைகொத்தளம் வரைக்கும் தமிழில தெரிஞ்ச சொல் அத்தனையிலயும் பதியினம். இதுக்குள்ள எண்ணம் எண்டே ரெண்டு மூண்டு பதிவு கிடக்குது. இந்தப்பெயர் பஞ்சத்துக்குள்ள பரம்பரை ஆண்டி நான் என்ன பெயரைப் புடுங்கிறதெண்டு குழம்பிப்போனன். நல்ல காலத்துக்கு அஞ்சு நச்சத்திரம் வோட்டுப் போடச் சொல்லித் தமிழ்மணத்தில கிடக்கிறது கண்ணில பட்டுது. தேடினால், இண்டைக்குவரைக்கும் அஞ்சு நச்சத்திரப்பதிவேதும் இருக்கிறதாத் தெரியேல்லை. என்ரை எழுத்துக்கு எவரும் வோட்டுப்போடாமல் விட்டாலுஞ்சரி, பதிவு அஞ்சு நச்சத்திரப்பதிவாய் எண்டைக்கும் இருக்கட்டுமெண்டு பெயரை வச்சாச்சு. அடுத்தது கிணத்தில குதிச்சப்பிறகு நீந்தப்பழகவேண்டிய அபாயத்தில நிக்கிறன். என்ன பாடுறது? எப்படிப் பாடுறது? பாலன் அண்ணையைக் கேட்டால், "ஆளை அடிச்சு எழுது. அது சரி வராதெண்டால், அத்தினை பேரையும் அணைச்சு எழுது. அதைவிடப் புத்திசாலித்தனமாய் அடிக்கிற பதிவெல்லாம் அப்பிடியே அள்ளிக்கட்டிப் புத்தகமாப் போடுற மாதிரி எழுது" எண்டு கொடுப்புச்சிரிப்போடை விதண்டாவாதம் பேசுவார். "அவருக்கென்ன கூறிவிட்டார். அகப்பட்டது நானல்லவா?" எண்டுதான் பிறகும் நான் பாடிக்கொண்டு திரியவேணும். பேசாமல், ஒண்டு செய்யப்போறன். இண்டைக்கு எதைக் குறை சொல்லோணுமெண்டு முதலிலை படுதோ அதை எழுதப்போறன். வாழ்த்திறதைப் பிறகாச்சும் பண்ணலாம். ஆனால், திட்டுறதைப் பட்டதோட திட்டவேணும். இல்லையெண்டால், திட்டுப் பட்டுப்போகும்.


Anonymous Anonymous said...

நீ கலையா களையா  


Blogger மதி கந்தசாமி (Mathy) said...

vaanga vaanga!!!

kalakkalaa ezuthi irukkiReenga... appadiyae antha 5 natchaththira code'aiyum pOttaa, naanga kuththi viduvamallae..  


Blogger கயல்விழி said...

வாங்கோ வாங்கோ. இப்படி அழகான தமிழ் கேட்டு கன நாளாய்ப்போச்சு. சந்தோசமாய் இருக்கு எழுதுங்கோ. கனபதிவில கிடக்கிற தமிழ் விளங்க மாட்டன் என்டுது, நானும் முயற்சிக்கிறன்.  


Post a Comment

என்ரை இந்தப்பதிவைத் தமிழ்மணத்திலை தரப்படுத்துங்கோ. இப்பத்தைய தராதரம்:

மெத்தப்பெரிய உபகாரம்.


வலைப்போடு நச்சத்திரத்துழாவல்

© கலை 2005 - by Blogger Templates