தலைப்பு என்ன வைக்கிறதெண்டு தலையைச் சொறிஞ்சால், சொடுகைத் தவிர வேறையண்டும் சொட்டினதாத் தெரியேல்ல. மிச்சப்பேர் எப்பிடி வைச்சிருக்கினமெண்டு பாக்கப்போனால், குப்பைகூளம் துடங்கி கோட்டைகொத்தளம் வரைக்கும் தமிழில தெரிஞ்ச சொல் அத்தனையிலயும் பதியினம். இதுக்குள்ள எண்ணம் எண்டே ரெண்டு மூண்டு பதிவு கிடக்குது. இந்தப்பெயர் பஞ்சத்துக்குள்ள பரம்பரை ஆண்டி நான் என்ன பெயரைப் புடுங்கிறதெண்டு குழம்பிப்போனன். நல்ல காலத்துக்கு அஞ்சு நச்சத்திரம் வோட்டுப் போடச் சொல்லித் தமிழ்மணத்தில கிடக்கிறது கண்ணில பட்டுது. தேடினால், இண்டைக்குவரைக்கும் அஞ்சு நச்சத்திரப்பதிவேதும் இருக்கிறதாத் தெரியேல்லை. என்ரை எழுத்துக்கு எவரும் வோட்டுப்போடாமல் விட்டாலுஞ்சரி, பதிவு அஞ்சு நச்சத்திரப்பதிவாய் எண்டைக்கும் இருக்கட்டுமெண்டு பெயரை வச்சாச்சு. அடுத்தது கிணத்தில குதிச்சப்பிறகு நீந்தப்பழகவேண்டிய அபாயத்தில நிக்கிறன். என்ன பாடுறது? எப்படிப் பாடுறது? பாலன் அண்ணையைக் கேட்டால், "ஆளை அடிச்சு எழுது. அது சரி வராதெண்டால், அத்தினை பேரையும் அணைச்சு எழுது. அதைவிடப் புத்திசாலித்தனமாய் அடிக்கிற பதிவெல்லாம் அப்பிடியே அள்ளிக்கட்டிப் புத்தகமாப் போடுற மாதிரி எழுது" எண்டு கொடுப்புச்சிரிப்போடை விதண்டாவாதம் பேசுவார். "அவருக்கென்ன கூறிவிட்டார். அகப்பட்டது நானல்லவா?" எண்டுதான் பிறகும் நான் பாடிக்கொண்டு திரியவேணும். பேசாமல், ஒண்டு செய்யப்போறன். இண்டைக்கு எதைக் குறை சொல்லோணுமெண்டு முதலிலை படுதோ அதை எழுதப்போறன். வாழ்த்திறதைப் பிறகாச்சும் பண்ணலாம். ஆனால், திட்டுறதைப் பட்டதோட திட்டவேணும். இல்லையெண்டால், திட்டுப் பட்டுப்போகும்.
said...
மதி கந்தசாமி (Mathy) said...
vaanga vaanga!!!
kalakkalaa ezuthi irukkiReenga... appadiyae antha 5 natchaththira code'aiyum pOttaa, naanga kuththi viduvamallae..
கயல்விழி said...
வாங்கோ வாங்கோ. இப்படி அழகான தமிழ் கேட்டு கன நாளாய்ப்போச்சு. சந்தோசமாய் இருக்கு எழுதுங்கோ. கனபதிவில கிடக்கிற தமிழ் விளங்க மாட்டன் என்டுது, நானும் முயற்சிக்கிறன்.


