Tuesday, February 08, 2005
2/08/2005 09:33:00 PM - என்னத்தைப் பதியிறது?
குறையில கதையைப் பதியலாமெண்டால், குறை சொல்லுறவன் உள்ளிட எல்லாமே குறையாத்தான் தெரியுது. பேசாமல் என்னில இருக்கிற குறையையே எழுதியிடுவனோ எண்ட பயம் படபடவெண்டு மிதிச்ச புத்திலயிருந்து கறுப்பெறும்பு காலிலை ஏறுறமாதிரி எழும்பி வருகுது. பதிய நாளிலையே முழுவியளமாய்க் குறையையோ எழுதுறதெண்டு சோர்வுதான் உள்ளை வருகுது. எல்லாத்துக்கும்மேலை, இப்பிடிச் சோர்வைச் சொன்னாக்கூடி, அதுக்கும் ஒரு தலைப்புக் குடுக்கவேணுமெண்ட அலுப்பு வேற. பேசாமல், இதிலையே நிப்பாட்டப்போறன். நாளை மிச்சதைப் பாக்கலாம். ஒரு நாள் நான் பதியாமப் போறதால, ஒருத்தருக்கும் ஒரு இழவும் குறையப்போறதில்லை. பாலன் அண்ணை பாத்தாத்தான் சிரிப்பார். அவருக்கென்ன? தடியையும் வாங்கி அடியையும் குடுக்கிற ஆள். ஒரு வீறாப்பிலை தொடங்கிப்போட்டு, இப்ப அம்பிட்டுக்கிடக்கிறது நானெல்லே?
said...
என்ரை இந்தப்பதிவைத்
தமிழ்மணத்திலை தரப்படுத்துங்கோ.
இப்பத்தைய தராதரம்:
மெத்தப்பெரிய உபகாரம்.
© கலை 2005 -
by Blogger Templates