<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=10703033&amp;blogName=%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=BLACK&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http://anjsunassaththiram.blogspot.com/search&amp;blogLocale=en_US&amp;homepageUrl=http://anjsunassaththiram.blogspot.com/&amp;vt=6068539680504986760" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>
அஞ்சு நச்சத்திரம்

அவரவர் பதிவை அவரே தட்டினால் அஞ்சு நச்சத்திரப்பதிவாகுமாம் அது 

Friday, July 22, 2005

7/22/2005 02:47:00 PM - காணாமப்போனன்

நானும் அஞ்சு நச்சத்திரத்தைத் துடங்கி நாலு பதிவைப் போடயில்லை அதுக்குள்ளை வேலையைக் கொம்பியூட்டர் இல்லாத ஊருக்கு மாத்திப்போட்டாங்கள். கொம்பியூட்டர் இல்லாத ஊரெண்டாலுங்கூடப் பறவாயில்லை ஆனா இந்த பூச்சிக்குளத்துக்குக் கரண்டுகூட இல்லை. படிப்பிக்கிற வேலை ஈசியா இருக்குது எண்டது மட்டுந்தான் பிடிச்சிருக்கு. ரவுன் பிள்ளையள்மாதிரி ஒரு நீயென்ன மசிரை எனக்குப் புடுங்கிறது எண்ட தன்மை பூச்சிக்குளப்பிள்ளையளுக்கு இல்லை. பள்ளிக்கு வந்தால் படிப்புக்கதையும் இயக்கக்கதையும். படக்கதை கொஞ்சம் இருக்கத்தான் செய்யுது. ஆனா படத்தைப் பத்திக் கதையாத ஒரு பள்ளிக்கூடப்பிள்ளையை எந்த ஊரிலையும் காண ஏலாது எண்டுதான் நினக்கிறன்.

திரும்ப ஒரு மாதத்தில ஓடவேணும். இருக்கிற வரைக்கும் அடிக்கிறது பதிவெண்டு சந்தோசப்படவேண்டியதுதான். பதிவுக்கெண்டே வாழ்க்கை, அதுவும் இண்டைக்கோ நாளைக்கோ ஊருக்குள்ள பிரச்சனை வெடிக்குமெண்டு அம்மிக்கொண்டிருக்கிற நேரத்தில. ஆனா இருக்கிற நேரத்தில அஞ்சுமாசப்பதிவுகளையெல்லாம் வாசிக்கலாமெண்டொரு யோசனை.

| Permanent Link

என்ரை இந்தப்பதிவைத் தமிழ்மணத்திலை தரப்படுத்துங்கோ. இப்பத்தைய தராதரம்:

மெத்தப்பெரிய உபகாரம்.
Friday, February 11, 2005

2/11/2005 04:10:00 PM - ஊக்கமளிச்சவைக்கு உபகாரம்

காசிலிங்கம் அண்ணையும் மதி அண்ணையும் சொன்னதுபோல அஞ்சு நச்சத்திரத்தில அஞ்சு நச்சத்திரத்தை ஏத்தியிருக்கிறன். நல்லது கெட்டதைப் பாத்துப் போடுங்கோ. எனக்குக் கருத்துச் சொல்லி ஊக்கமளிச்ச அவைக்கும் வசந்தன் அண்ணைக்கும் கயல்விழி அக்காவுக்கும் மெத்தப்பெரிய உபகாரம். அண்ணை அக்கா எண்டு வயதில கூட இருப்பீங்கள் எண்ட யோசனையோட சொல்லிப்போட்டன். எனக்கு வயசு இந்த வருசம் ஆடி ஏழாந்திகதி பிறக்க இருபத்தைஞ்சு. தற்செயலா என்னை விட வயசு குறைவாய் இருந்தால் கோபிக்கக்கூடாது. வலையில எழுதைக்குள்ள எழுதிறதை வச்சுத்தான் ஆளை மட்டுக்கட்டலாம். அதால உங்கட எழுத்தை வச்சு எனைவிட வயசுகூட இருப்பியள் எண்டு எண்ணுறன். பிழையாய் எண்ணிப்போட்டனெண்டால் திருத்திவிடுங்கோ. வலையில வயசுமட்டுமே, ஆளைப்பாக்காமல் பேரைமட்டும் பாத்து ஆம்பிளையா பொம்பிளையா எண்டுகூடச் சொல்ல ஏலாமக்கிடக்கிடக்கு எண்டு பாலன் அண்ணையும் மாறன் சித்தப்பாவும் எனக்கு என்ரை கலை எண்ட பெயரை வச்சுக் கிடைக்கிற நேரமெல்லாம் நக்கல் அடிக்கிறவை. கலையரசனோ கலையரசியோ கலைமகனோ கலைமகளோ எண்டு உன்ரை தனிக்கலையை வச்சுப் பிடிக்க ஏலாது எண்டமாதிரி நக்கல். அதுக்கு நானென்ன செய்ய ஏலும்? சினப்பிள்ளையிலயிருந்தே கலை கலை எண்டு வாய்க்குள்ள அவசரத்துக்கு வாறதுக்கெண்டும் செல்லமெண்டும் கூப்பிட்டுக் கூப்பிட்டு எனக்கே என்ரை முழுப்பேர் சில நேரத்தில ஆரும் கேட்டா சட்டெண்டு சொல்லவர்றேல்லை எண்டால் நீங்கள் நம்புவியளோ? சத்தியமா மாட்டியள்.

ரெண்டுநாளாப் பள்ளிக்கூடத்துக்குப் போகயில்லை. சரியான தலையிடியும் காச்சலும். போன் பண்ணிப் பிரின்சிப்பலிட்டைச் சொல்லப்பாத்தால் அவரில்லை. பின்னை சுகி அக்காட்டை பிரின்சிப்பலிட்டச் சொல்லச் சொல்லிப் போய்ச் சொல்லியிட்டு வந்தன். போன திங்கள் இரவு வாசிகசாலைக்கூட்டத்துக்குப்போயிட்டுப் பிறகு செந்திவீட்டை போய்க் கதைச்சுப்போட்டு வரேக்கையே கொஞ்ச தலையிடியாத்தான் இருந்துது. நான் அலைஞ்சு திரிஞ்சதால எண்டு விட்டிட்டன். அண்டைக்கு இரவு பாத்தாகொதி கொதி எண்டு கொதிக்குது. ரெண்டு அஸ்ப்ரினை நாலுமணத்தியாலத்துக்கு ஒருக்கா எடுத்துப்போட்டுப் போட்டுப் படுத்தால், எங்கை நித்திரை வருது? எல்லாம் பழைய ஞாபகந்தான் கனவில திரும்ப நடக்கிறதுமாதிரி மூச்சையும் நெஞ்சையும் அமுக்கின படி நடந்தது. அம்மா வந்து கொத்தமல்லி வைச்சுத்தரவோ எண்டால், எனக்குக் காச்சலே பறவாயில்லையெண்டு பட்டுது. கொத்தமல்லிக்கச்சலும் அதைக்குடிச்சு முடிக்க உள்ளங்கையில போட்டு நக்குற சீனியும். ரெண்டுமே அருவெறுப்பு. ஆனா கடைசியில காச்சலின்ரை கரைச்சலும் அம்மாவின்ரை கரைச்சலும் தாங்க ஏலாமச் சரி எண்டு சொல்லிச் சுடச்சுட மூக்கைப் பொத்திக்கொண்டு குடிச்சு முடிச்சன். கூடப்பயந்திருந்தனோ என்னவோ தெரியேல்ல. குடிக்கேக்க கச்சல் ஒண்டும் பெரிசில்லை எண்டு பட்டுது. வாறகிழமை அடுத்த கிழமையில, ரெண்டுநாளும் விட்ட வகுப்புகளை எடுக்கோணும். அது பெரிய தொந்தரவு. இண்டைக்கு மாறன் சித்தப்பாவோட செல்வபுரத்துக்குப் போகோணும். சம்பந்தப்பட்ட ஆக்களின்ரை நாட்டிண்டை ஊரின்ரை பேர்களைச் சொல்லுறது அவைக்குச் சரியில்லைத்தானே. அதால, இங்க மாத்தி எழுதியிருக்கிறன். மிச்சத்தைப் பிறகு வந்து எழுதுறன்.

| Permanent Link

என்ரை இந்தப்பதிவைத் தமிழ்மணத்திலை தரப்படுத்துங்கோ. இப்பத்தைய தராதரம்:

மெத்தப்பெரிய உபகாரம்.
Wednesday, February 09, 2005

2/09/2005 10:39:00 PM - மூண்டாம் பதிவு

என்னத்தை எழுதுறதெண்டும் தெரியேல்லை. பாலன் அண்ணை கிளப்பிவிட்ட உசாரில பதிவைத் துடங்கிப்போட்டு, அதுக்குப்பின்னால என்னத்தை எழுதுறதெண்டு முழிச்சிக்கொண்டிருக்கிறன். மூண்டு பதிவு போடாமல், தமிழ்மணத்திலையும் ஏத்தமாட்டினமெண்டு எழுதியிருக்கினம். தமிழ்மணத்தில ஏறாட்டி, அமாவாசை மழை இரவில ஒத்தைக்குயில் வேப்பமரத்தில இருந்து குக்கூ எண்டு தனியக் கவலை அப்ப அப்பக் கூவினமாதிரிமட்டுந்தான் எந்தத்தமிழ்ப்பதிவுமிருக்கும். கப்பலைக்கட்டினால், ஓடுதோ இல்லையோ கடலிலை ஒருக்காலாவது இறக்கிப் பாக்கோணுமெண்ட ஆசை கட்டினவருக்கு வராதோ? அதால இதையே மூண்டாம் பதிவாப் போட்டுடலாமெண்டு நினைக்கிறன்.

பிள்ளை பிறந்தால், ரெஜிஸ்ரார் ஒப்பீஸில அப்பா அம்மா பேர், பிள்ளை பேர், பிறந்த இடம், பாட்டன் பூட்டன் பிறந்த இடமெல்லாம் சொல்லிப் பதியிற மாதிரி, தமிழ்ப்பதிவு வலையில தொடங்கினால், தமிழ்மணத்தில பதிஞ்சு போடோணும். அது பெரிய வசதி. அதால, இதைத் தமிழ்மணத்தில பதியப்போறன். ஆனா, அங்கை ஒரு குழப்பம் வந்திட்டுது. வசிப்பிடம் எண்டுறதுக்கு நேரை, இந்தியதுணைக்கண்டம், ஆசியா எண்டு ரெண்டா இருக்கு. எனக்கு என்ன குழப்பமெண்டால், ஆசியாவுக்குள்ள இந்தியதுணைக்கண்டம் வராதோ? பிறகென்னத்துக்கு இந்திய துணைக்கண்டத்தைத் தனியப் பிடிச்சுப் பிரிச்சுப் போடோணுமெண்டு. ஆனா, நான் என்ரை அஞ்சு நச்சத்திரப்பதிவை ஆசியாவுக்குள்ள போட்டாச் சரியெண்டுதான் படுகுது. அப்பிடியேதான் போடப்போறன்.

இந்த அஞ்சு நச்சத்திரத்தில, எலெக்ஷனிலை வோட் கேக்கிறமாதிரி எனது அஞ்சு நச்சத்திரத்துக்குக் கீழை ஒரு நேர் இல்லை ஒரு மறையெண்டு கேஸரால குத்துங்கோ எண்டு கேக்கிறது கொஞ்சம் அந்தரமான விஷயம்.தமிழ்மணக்காரர் பதிவின் நல்லது கெட்டது அறியிறதுக்காக நச்சத்திரக்கணக்கு வைச்சாலும், இது பதிஞ்ச விதம் நல்லதெண்டு சொல்லுறதா, இல்லை, பதிஞ்ச விஷயம் பிடிச்சிருக்கு எண்டுறதைச் சொல்லுறதா எண்டு தெரியாமல் குழப்புது. அதால, இங்கை நான் அஞ்சு நச்சத்திர இணைப்பைக் குடுக்கேல்லை. இதுக்காண்டிப் பிறகும் குடுக்கமாட்டனெண்டு இல்லை. ஆனா, கொஞ்சம் யோசிச்சுப் பாத்த பிறகு குடுப்பமெண்டு இருக்கிறன்.

அடுத்தபதிவெண்டாச்சும் படியிற மாதிரிப்படிவாப் போடோணுமெண்டு நினைக்கிறன். ஆனா, நினைக்கிறதெல்லாம் நடக்குதோ?

| Permanent Link

என்ரை இந்தப்பதிவைத் தமிழ்மணத்திலை தரப்படுத்துங்கோ. இப்பத்தைய தராதரம்:

மெத்தப்பெரிய உபகாரம்.


வலைப்போடு நச்சத்திரத்துழாவல்

© கலை 2005 - by Blogger Templates